சனி, 1 மே, 2021

நம்பிக்கை

 *#நம்பிக்கைன்னா என்ன...!!??*


எல்லாம் ஒழுங்காக நடக்க, நீங்கள் நம்பிக்கையோடு இருந்தால் அதன் பெயர் நம்பிக்கையில்லை.


எதுவுமே ஒழுங்காக நடக்காதிருக்கும் போதும்,நீங்கள் தைரியமாக வாழ்ந்தால் அதன் பெயரே #நம்பிக்கை ! ! !


நீங்கள் நினைப்பதெல்லாம் உங்களுக்கு நடக்க நீங்கள் பலமாக உணர்ந்தால் அதன் பெயர் நம்பிக்கையில்லை.


நீங்கள் நினைக்காத பயங்கரங்கள் உங்களுக்கு நடந்தாலும் நீங்கள் அசராமலிருந்தால் அதன் பெயரே #நம்பிக்கை ! ! !

 

உற்றாரும் பிறரும் உங்களுக்கு உதவி செய்ய,

நீங்கள் நிதானமாக இருந்தால்

அதன் பெயர் நம்பிக்கையில்லை.


உங்களுக்கு உதவ யாருமே

தயாராக இல்லாத சமயத்திலும்

நீங்க பக்குவத்தோடிருந்தால் அதன் பெயரே #நம்பிக்கை ! ! !


எல்லோரும் உங்களைக் கொண்டாட, நீங்கள் சந்தோஷமாக

இருந்தால் அதன் பெயர் நம்பிக்கையில்லை.


எல்லோரும் உங்களை அவமதித்து ஒதுக்கித் தள்ள

அவர்கள் முன் ஜெயிக்கப் போராடினால்

அதன் பெயரே #நம்பிக்கை ! ! !

 

உங்கள் முயற்சிகளெல்லாம் வெற்றியடைய நீங்கள் அழகாகத் திட்டமிட்டால் அதன் பெயர் நம்பிக்கையில்லை.


உங்களுடைய எல்லா முயற்சிகளும்

தோல்வியடைய, அதிலிருந்து பாடம் கற்று நீங்கள் முயன்று கொண்டேயிருந்தால்

அதன் பெயரே #நம்பிக்கை ! ! !


எல்லோரும் உங்களுக்கு நம்பகமாக நடக்க, நீங்கள் தெளிவாய் முடிவெடுத்தால்

அதன் பெயர் நம்பிக்கையில்லை.


உங்களுக்கு வேண்டியவரெல்லாம்

உங்கள் முதுகில் குத்திக் கொண்டேயிருக்க

நீங்கள் தெளிவான வழியில் சென்றால்

அதன் பெயரே #நம்பிக்கை ! ! !


உங்களிடத்தில் எல்லாம் இருக்க,

நீங்கள் எதிர்காலத்தைப் பற்றிக் கவலையில்லாமல் இருந்தால்

அதன் பெயர் நம்பிக்கையில்லை.


உங்களிடத்தில் எதுவுமே இல்லாத பட்சத்தில், நீங்கள் எதிர்காலத்தை நினைத்துப் பயப்படாமல் இருந்தால் 

அதன் பெயரே #நம்பிக்கை...!!!

சடைய வர்மன் சுந்தரபாண்டியன்

 சோழர்களின் பிற்கால எழுச்சியினை விஜயாலய சோழன் ஏற்படுத்தி வைத்தான் அவனின் வலுவான அஸ்திவாரத்துக்கு பின் மெல்ல மெல்ல சோழநாடு மேல் எழுந்தது 


அதற்கு பாண்டிநாடும் சேரநாடும் பெரும் எதிர்ப்பை கொடுத்து கொண்டே இருந்தன, ஆதித்த கரிகாலன் பாண்டிய நாட்டை வென்றே தீருவது என கங்கணம் கட்டி வீரபாண்டியனை மதுரைக்குள் புகுந்து ஒழித்து கட்டியிருந்தான்


பதிலுக்கு பாண்டியரும் சேரரும் அவனை அவன் நாட்டில் ரகசியமாக புகுந்து தலைவெட்டி கொன்றனர்


அதன் பின் அரியணைக்கு வந்த ராஜராஜன் புலிபோல் நின்றான், அவனிடம் எந்த படையும் வெல்ல முடியவில்லை


காந்தளூர் சாலை என சேரரை நிர்மூலமாக்கிய அவன், பாண்டியரை முறிய அடித்து காலுக்கு கீழ் வைத்திருந்தான், இவர்களோடு கூட்டணிக்கு வந்த ஈழ அரசனை அனுராதாபுரத்தில் முறியடித்து போட்டிருந்தான்


ராஜராஜன் காலத்தில் பாண்டியர் எங்கிருந்தார் என்பதே தெரியாது


ராஜராஜனுக்கு பின் அவன் மகன் ராஜேந்திர சோழன் எழும்பினான், அவன் கொம்பாதி கொம்பனாக இருந்தன், தந்தையினை விட பலமடங்கு பாய்ச்சல் காட்டி தென் பாரதகண்டத்தையே ஆட்டி வைத்திருந்தான் கடல் கடந்தும் அவன் செல்வாக்கு இருந்தது


அவனுக்கு பின் சோழ வம்சம் மெல்ல சரிந்தாலும் மூன்றாம் குலோத்துங்கன் காலம் வரை சோழநாடு அசையாமல் இருந்தது


ஆனால் மூன்றாம் ராஜராஜனை ஓட அடித்து மதுரையினை மீட்டான் முதலாம் சுந்தர பாண்டியன், மதுரை அவன் காலத்தில் மறுபடி பாண்டிநாடானது


பாண்டிகொடி பறந்ததே தவிர நிலையான உறுதியான ஆட்சியாளர்கள் இல்லை, இருப்பதை தக்க வைத்து கொண்டிருந்தார்கள்


அந்த சுந்தரபாண்டியனின் 6ம் வாரிசில் வந்தவனே ஜடாவர்மன் சுந்தரபாண்டியன்


வரலாற்றில் மாபெரும் இடம் அவனுக்கு உண்டு, சந்தேகமின்றி சொல்லலாம் ராஜேந்திர சோழன் சோழர்குல அடையாளமென்றால் சடாவர்மன் பாண்டியரின் தனிபெரும் அடையாளம்


சோழ வம்சத்தை முற்றிலும் அடித்து வீழ்த்தி பழையாறையில் சாதாரண சிற்றரசர்களாக அவர்களை ஒடுக்கி வைத்திருந்தான் சடாவர்மன்


ராஜராஜசோழனின் மாபெரும் சாம்ராஜ்யம் அவனால் முடிக்கபட்டு பாண்டியர் கைக்கு வந்திருந்தது


சேரமன்னன் உதயமார்த்தாண்டனை ஓட அடித்திருந்தான் சடாவர்மன், அப்பொழுத் சேரநாட்டின் முக்கால்வாசி பகுதி இவனிடம்தான் இருந்தது, அந்த அளவு அடக்கி வைத்திருந்தான், பெரும் பணம் கப்பமாய் வந்தது


பாண்டியருகும் சேரருக்கும் தீரா பகை ஏற்படவும் இன்று "பாண்டி" என ஒருமாதிரி கேரளத்தவர் இழுக்க முதல் காரணமே ஜடாவர்மனின் படையெடுப்பே


இன்றைய சமயபுரமாகவும் அன்றைய கண்ணூராகவும் இருந்த கோட்டையினை ஹோய்சாள மன்னரான  வீரசோமேசுவரன் என்பவனை அடித்த அடியில் ஹோய்சாள அரசு அவர்களின் பூர்வீகத்துக்கே ஓடிற்று கண்ணூர் பாண்டியர் கட்டுபாட்டில் வந்தது


ஹோய்சாளர்களின் பலமான தளபதிகளையெல்லாம் அவன் வென்று வீழ்த்திய அச்சத்தில் ஹோய்சாளர் அதன் பின் நெடுங்காலம் அப்பக்கமே தலைவைத்து படுக்கவில்லை


இலங்கை திரிகோணமலையினை கைபற்றி ஈழநாட்டை தனது அரசுடன் இணைத்த ஜடாவர்மன் அங்கிருந்து கடாரம் சென்று ஷயாம் (தாய்லாந்து) நாட்டையும் கைபற்றியிருந்தான்


சந்திரபானு எனும் தாய்லாந்து மன்னனும் அவனுக்கு அடிபணிந்து கப்பம் கட்டினார்


வட தமிழ்நாட்டிலும் கிழக்காசிய நாடுகளிலும் அதிகாரம் செலுத்திய பல்லவர்களை ஒழித்து கட்டிய ஜடாவர்மன் , பல்லவ மன்னனான கோப்பெருஞ்சிங்கனை தனக்கு உட்பட்ட சிற்றரசனாக்கி பெரும் கப்பம் பெற்றான்


கொங்கு நாட்டினை அந்நாட்டு அரசர்களான‌ வாணாதிராசர், வாணகோவரையர் போன்றவர்களிடமிருந்து கைப்பற்றி அசத்தினான் ஜடாவர்மன்


தென்னகம் முழுக்க அவன் கட்டுபாட்டில் வந்தபின் மெல்ல வடக்கே சென்றான்


தெலுங்கு மன்னர் விஜயகண்ட கோபாலனை எளிதில் தட்டி காஞ்சியினை பிடித்த அவன் அதற்கு அப்பால் செல்லும் பொழுது பெரும் அரசு இருந்தது


அது காகதீய பேரரசு


அந்த பேரரசை பெரும் போருக்கு பின் வீழ்த்தினான் ஜடாவர்மன், அதன் பின் அவன் ஆட்சி துங்கபத்திரா தாண்டி இன்றைய ஓடிசா வங்கம் வரை நீண்டது


அப்படியே பர்மா தாய்லாந்து என அவன் ஆளுகைக்குள் வந்தது


சுருக்கமாக சொன்னால் ராஜேந்திர சோழன் ஆண்ட பகுதியினையெல்லாம் அவனுக்கு பின் 200 ஆண்டுகள் கழித்து அதைவிட பெரிதாக ஆண்டு சரித்திரம் படைத்திருந்தான் சடாவர்மன்


அவனின் குறிப்பிடதக்க இன்னொரு அம்சம் சிவபக்தி, நல்ல இந்து அரசனாக சிவாலயங்களுக்கு மட்டுமல்ல வைணவ ஆலயங்களுக்கும் அள்ளி கொடுத்தான்


தில்லை நடராசப் பெருமானின் கோயில் கோபுரத்திற்குப் பொன்தகடு வேய்ந்து அவனே, அந்த சான்று இன்றும் அங்கு உண்டு


அங்குள்ள நான்கு ராஜகோபுரங்களில் மேற்குக் கோபுரத்தினைக் அவனே கட்டினான், இன்றும் அதன் பெயர் சுந்தரபாண்டியன் கோபுரமே


ஸ்ரீரங்கம் கோவிலை அவன் மனமார நேசித்தான், சிவபக்தனாயினும் திருமாலை வணங்கிய முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்டுள்ள பெருமானின் கோபுரத்தை பொன்னால் வேய்ந்தான்


அவனின் முடிசூடும் விழா கூட அங்குதான் நடந்தது


கோயில் பணிகளிற்காக நிலங்களினைக் காணிக்கையாக அளித்து அக்கோயில் இறைவனுக்கு அணிகலன்கள் பலவனவற்றை அளித்தான்.


இன்றும் திருவரங்க ஆலயத்தில் உள்ள கல்வெட்டில் இவனது பெருமாள் சேவைகள் குறிக்கபட்டுள்ளன, பின்னாளில் திருவரங்கம் ஆலயம் பொன்னும் பொருளும் கொட்டி கிடக்கும் இடமாகவும் ஆப்கானியர் கண்களை உறுத்தும் விஷயமாகவும் மாற ஜடாவர்மன் முக்கிய காரணம்


தில்லை, திருவரங்கம் என பல கோயில்களுக்கு பொற்கூரை அமைத்ததால்  "கோயில் பொன் வேய்ந்த பொருள்" என்ற பட்டத்தினைப் பெற்றான்.


கோவில் நகரமான காஞ்சியில் அவனின் சேவை அதிகம் இருந்தது வராதீசுவரன்,காஞ்சீபுரங்கொண்டான் போன்ற பட்டங்கள் அவனை தேடி வந்தன‌


"எல்லாந் தலையனானான்" அதாவது ராஜராஜன் என்ற சிறப்புப் பெயரினையும் பெற்றான். 


கச்சீசுவரர் கோயில் மற்றும் வரதராஜ பெருமாள் கோயில் இரண்டிற்கும் திருப்பணிகள் செய்தான்.காஞ்சீபுரம் திருப்புட்குழித் திருமால் கோயிலில் அவனின் புகழ் செதுக்கபட்டுள்ளது, அது இப்படி பாடுகின்றது


"வாழ்க கோயில் பொன்வேய்ந்த மகிபதி

வாழ்க செந்தமிழ் மாலை தெரிந்தவன்


வாழ்க மண்டலம் யாவையும் கொண்டவன்

வாழ்க சுந்தர பாண்டியன் தென்னனே"


ஆம் அவன் சமஸ்கிருதம் தமிழ் என இரண்டையும் நேசித்தான் வளர்த்தான். இரண்டையும் தன்னால் முடிந்தவரை வளர்த்திருந்தான்


அவனைபற்றிய கல்வெட்டுகள் இருமொழியிலும் பல இடங்களில் உண்டு 


நெல்லையப்பர் கோவிலில் அவனின் திருபணிகள் ஏராளம், நெல்லையப்பர் கோவிலை விஸ்தரித்து பெரும் பரப்பளவில் அதை நிர்மானித்தான், இன்றிருக்கும் பிரமாண்ட நெல்லையப்பர் கோவில் அவனால் வந்தது


அவனின் மெய்கீர்த்தி இப்படி தொடங்கும், மிக நீண்ட பாடல் அது, விரும்பினால் படியுங்கள் அவனின் வாழ்க்கை சுருக்கம் அதில் தெரியும்


அவனின் போரும் வெற்றியும் மிக மிக பெரியது என்பதால் மெய்கீர்த்தியும் நீண்டுவிட்டது


"ஸ்வஸ்திஸரீ

பூமலர்வளர் திகழ்திருமகள் புகழாகம் புணர்ந்திருப்ப

நாமலர்வளர் கலைவஞ்சி நலமிகுமா மனத்துறையச்

சிமையவரைத் திறன்மடந்தை திருத்தோளின் மிசைவாழ

மையவர் கோன்அன்றிட்ட எழிலாரம் கழுத்திலங்கப்

பகிரதிபோற் துய்யபுகழ்ப் படர்வல்லி கொழுந்தோட்டத் - 5

திகிரிவரைக் கப்புறத்துஞ் செழுந்திகிரி சென்றுலவத்

தண்டரள மணிக்கவிகை தெண்டிரைசூழ் பார்நிழற்ற

வெங்கோபக் கலிகடிந்து செங்கோலெண்டிசைநடப்பச்

செம்முரசின் முகில்முழங்கச் சிலையகன்று விசும்படையத்

திறற்புலிபோய் வனமடையக் . . . . . - 10

கயலிரண்டும் நெடுஞ்சிகர கனவரையின் விளையாட

ஒருமைமனத் திருபிறப்பின் முத்தீயின் நால்வேதத்

தருமறையோர் ஐவேள்வி யாறங்கமுடன்சிறப்ப

அருந்தமிழும் ஆரியமு அறுசமயத் தறநெறியும்

திருந்துகின்ற மனுநெறியுந் திறம்பாது தழைத்தோங்கக் - 15

குச்சரரும் ஆரியரும் கோசலரும் கொங்கணரும்

வச்சிரரும் காசியரும் மாகதரும் . . .

அருமணரும் சோனகரும் அவந்தியரு முதலாய

ருநிலமா முடிவேந்தர் றைஞ்சிநின்று திறைகாட்ட

வடிநெடுவாளும் வயப்பெரும்புரவியும் - 20

தொடிநெடுந் தோளுமே துணையெனச் சென்று

சேரனும் தானையும் செருக்களத் தொழிய

வாரசும் புலரா மலைநாடு நூறப்

பருதிமாமரபிற் பொருதிறல் மிக்க

சென்னியைத் திறைகொண்டு திண்தோள்வலியிற் - 25

பொன்னி நாட்டு போசலத்தரைசர்களைப்

புரிசையிலடைத்துப் பொங்குவீரப் புரவியும்

செருவிற லாண்மைச் சிங்கணன் முதலாய

தண்டத் தலைவரும் தானையும் அழிபடத்

துண்டித்தளவில் சோரி வெங்கலுழிப் - 30

பெரும்பிணக் குன்றம் ருங்களனிறைத்துப்

பருந்தும் காகமும் பாறும் தசையும்

அருந்தி மகிழ்தாங்கு அமர்கள மெடுப்பச்

செம்பொற் குவையும் திகழ்கதிர் மணியும்

மடந்தையர் ஆரமார்பும் உடன் கவர்ந்தருளி - 35

முதுகிடு போசலன் தன்னொடு முனையும்

அதுதவ றென்றவன் தன்னை வெற்பேற்றி

நட்பது போலுட் பகையாய் நின்ற

சேமனைக்கொன்றுசினந்தணிந்தருளி

நண்ணுதல் பிறரால் எண்ணுதற்கரிய - 40

கண்ணனூர்க்கொப்பத்தைக் கைக்கொண்டருளி

பொன்னிசூழ் செல்வப் புதுப்புனல் நாட்டைக்

கன்னி நாடென காத்தருள் செய்யப்

பெருவரை யரணிற்பின்னருகாக்கிய

கருநா டரசனைக் களிறுதிரை கொண்டு - 45

துலங்கொளி மணியும் சூழிவேழமும்

லங்கை காவலனைக் றைகொண்டருளி

வருதிறை மறுத்து அங்கவனைப்பிடித்துக்

கருருமுகில் நிகளங் காலினிற் கோத்து

வேந்தர்கண் டறியா விறற்றிண் புரிசைச் - 50

சேந்தமங்கலசெழும்பதிமுற்றிப்

பல்லவன் நடுங்கப் பலபோ ராடி

நெல்விளை நாடும் நெடும்பெரும் பொன்னும்

பரும யானையு பரியு முதலிய

அரசுரிமைக் கைக்கொண்டு அரசவற்களித்துத் - 55

தில்லையம்பலத்துத் திருநடம்பயிலுந்

தொல்லை றைவர் துணைகழல் வணங்கிக்

குளிர்பொழில் புடைசூழ் கோழி மானகர்

அளிசெறி வேம்பின் அணிமலர் கலந்த

தொங்கல் வாகைத் தொடைகள் சூட்டித் - 60

திங்ளுயர் மரபு திகழவந் திருந்த

தன்னசை யால்நன் னிலைவிசை யம்பின்

எண்ணெண் கலைதேர் இன்மொழிப் பாவலர்

மண்ணின்மே லூழி வாழ்கென வாழத்தக்

கண்டவர் மனமும் கண்ணும் களிப்ப - 65

வெண்டிரை மகர வேலையி னெடுவரை

ஆயிரம் பணைப்பணத் தனந்தன் மீமிசைப்

பாயல் கொள்ளும் பரம யோகத்து

ஒருபெருங் கடவளும் வந்தினி துறையும்

ருபெருங் காவிரி யிடைநிலத் திலங்கு - 70

திருவரங் கம்பெருஞ் செல்வம் சிறப்பப்

பன்முறை யணிதுலா பார மேறிப்

பொன்மாலை யன்ன பொலிந்து தோன்றவும்

பொன்வேய்ந் தருளிய செம்பொற் கோயிலுள்

வளந்திகழ் மாஅல் உதய வெற்பெனத் - 75

திருவளர் குலமணிச் சிங்கா சனமிசை

மரகத மலையென மகிழ்தினி தேறித்

தினகரோ தயமெனச் செழுங்கதிர் சொரியும்

கனக மாமுடி கவின்பெறச் சூடிப்

பாராள் வேந்தர் உரிமை அரிவையர் - 80

ருமறுங்கு நின்று விரிபெருங் கவரியின்

மந்த வாடையும் மலயத் தென்றலும்

அந்தளிர்க் கரங்கொண்ட சைய வீச

ஒருபொழு தும்விடாது உடனிருந்து மகிழும்

திருமகளெனத் திருத்தோள் மேவி - 85

யொத்தமுடி சூடி யுயர் பேராணை

திக்கெட்டும் நடப்பச் செழுந்தவஞ் செய்த

இவன்போ லுலகிலே வீரன் பலத்திற

மதிமுகத் தவனி மாமகளிலகு

கோடிக் காதல் முகிழ்த்துநின் றேத்தும் - 90

உலகமுழுதுடை யாளொடும் வீற்றிருந்தருளிய

சிரீகோச் சடைய வன்மரான

திரிபுவன சக்கர வர்த்திகள்சிரீ சுந்தர பாண்டிய

தேவர்க்கு யாண்டு ஏழாவது கன்னி ஞாயிற்று

அபர பட்சத்துத் திரியோதசியும் ஞாயிற்றுக் கிழமையும் - 95

பெற்றஅத்தத்துநாள்"


ஜடாவர்மனின் எழுச்சி வரலாற்றில் மிக மிக குறிப்பிடதக்க ஒன்று வடக்கே கிபி 1000ம் ஆண்டுகளில் ஊடுருவிய ஆப்கானியர் தெற்கே வர பெரும் அச்சம் கொடுத்தான் ராஜராஜன்


அவனுக்கு பின் ராஜேந்திர சோழன் கொடுத்திருந்தான்


இந்த இருவரும் இல்லா காலத்தில் அவர்கள் வாரிசாக எழும்பி ஆப்கானியருக்கும் ஹோய்சாளருக்கும் சிம்ம சொப்பனமாக நின்றிருந்தான் ஜடாவர்மன்


ஜடாவர்மன் மட்டும் எழவில்லை என்றால் 1320களில் வந்த ஆப்கானிய ஆட்சி 1200களிலே வந்திருக்கும் பெரும் விபரீதம் நிகழ்ந்திருக்கும்


ஜடாவர்மன் தொடங்கி வைத்த பாண்டிய பிடியில் இருந்துதான் விஜயநகர அரசு எழும்பி பின் சுல்தானியர்களை விரட்டிற்று


மதுரை கொடிய சுல்தானிய ஆட்சி வெறும் 47 ஆண்டுகளே, ஒருவேளை ஜடாவர்மன் எழாமல் போயிருந்தால் அது 300, அல்லடு 400 வருடங்களாக நின்றிருக்கும், வரலாறு அதைத்தான் சொல்கின்றது


இவன் எழுப்பிய பேரரசின் செல்வ செழிப்பின் உச்சத்தில் குலசேகர பாண்டியன் ஆளும் பொழுதுதான் மார்க்கோ போலோ இந்தியாவுக்கு அதாவது மதுரைக்கு வந்து குறிப்புகள் எழுதினான்


இவனது அரசு தென்னிந்தியாவின் தனிபெரும் அரசாக இருந்தது நிலவழி வருமானம், ஆற்றுபாசான விளைச்சல், கடல் வணிகம், முத்து குளித்தல் வருமானம் என மிகபெரும் உன்னதமான இடத்தில் அவன் நாடு இருந்தது


அவன் தலைநகரமாக மதுரை விளங்கினாலும் திருச்சி கண்ணூர் கோட்டையிலும் இருந்து ராஜபரிபாலனம் செய்திருந்தான்


சைவமும் வைணவமும் தளைக்க மிகபெரிய காரியங்களை செய்திருந்தான்


இவன் ஏற்படுத்திய வளமான மிகபெரும் செல்வமான அரசே அடுத்த ஒரு நூற்றாண்டுக்கு நீடித்திருந்தது, அந்த அரசை குலசேகர பாண்டியன் ஆளும் பொழுதுதான் அவன் வம்சத்தில் வாரிசு பிரச்சினை வந்து ஒரு வாரிசு  ஹோய்சால உதவியினை நாடபோய் கில்ஜியிடம் சிக்கி, கில்ஜியின் தளபதி மாலிக்காபூர் திருச்சியினையும் மதுரையினையும் சூறையாடினான்


அதன் பின் துக்ளக் வந்தான், அவனுக்கு பின் ஏற்பட்ட சுல்தானிய ஆட்சியினை விஜயநகர சாம்ராஜ்யம் வீழ்த்தி மதுரையினை ஆண்டது


தென்னிந்திய வரலாற்றில் ராஜேந்திர சோழனுக்கு நிகரான மாபெரும் வரலாற்றை உடையவன் முதலாம் ஜடாவர்ம பாண்டியன்


ஆனால் ராஜராஜனும் ராஜேந்திரனும் தெரிந்த அளவு தமிழருக்கு அவனை தெரியாது


காரணம் ராஜராஜனும் ராஜேந்திரனும் தனி தனி கோவில்களை கட்டி நகர்களை கட்டி அடையாளமிட்டனர்,  ஆனால் ஜடாவர்மன் தனக்கென தனி அடையாளம் தேடவில்லை இருந்த கோவில்களை விரிவுபடுத்தினான் கோபுரம் கட்டினான், பொற்கூரை வேய்ந்து அழகு பார்த்தான்


ராஜராஜ சோழன் ராஜேந்திர சோழன் வரலாறும் கடந்த நூற்றாண்டுவரை யாருக்கும் பெரிதாக தெரியாது, ஏன் தஞ்சை கோவிலை கட்டியதே ராஜராஜன் என்பதே நெடுங்காலம் தெரியாமல் இருந்தது


பின்னாளில் கல்கி போன்ற நாவலாசிரியர்கள் ராஜராஜன் , ராஜேந்திர சோழன் கதையினை பெரிதாக்கினர், பாலகுமாரன் போன்றவர்கள் அழியா காவியமாக்கினார்கள்


ஆனால் அதே நேரம் ராஜராஜன் புகழும் ராஜேந்திரன் புகழும் தஞ்சையில் வழிவழியாக கர்ண பரம்பரையாக காக்கபட்டன‌


பாண்டிய நாட்டில் அப்படி இல்லை பாண்டியருகுள் பின்னாளில் ஒற்றுமையில்லை சுல்தானிய ஆட்சியிலும் நாயக்கர் ஆட்சியிலும் பாண்டியர் புகழ் மறைக்கபட்டது


காரணம் இதையெல்லாம் தெரிந்தால் மக்கள் புரட்சியில் இறங்கலாம் எனும் அச்சமும் இருந்தது


தென்காசி, சிவகங்கை, ராமநாதபுரம் களக்காடு, வள்ளியூர் என ஒதுங்கிய பாண்டியர்கள் குடும்பத்திலும் ஜடாவர்மனின் பெரும் வரலாறு பாரம்பரியமாக மின்னியதே தவிர வெளிகொண்டுவரபடவில்லை


எனினும் ஆலய கல்வெட்டும் செப்பேடுகளும் அவன் ஆண்ட மாபெரும் ராஜ்ஜியத்தின் பெருமையினை சொல்லிகொண்டிருக்கின்றன‌


சித்திரை மூலம் (நாளை) அவனுக்கு குருபூஜை நாள்


நிச்சயம் ராஜராஜனின் சதயவிழா, ராஜேந்திரனின் ஆடி திருவாதிரை போல மிக மிக உற்சாகமாக கொண்டாடவேண்டிய நாள் அது


ஆனால் அதுபற்றி சிந்திப்பார் யாருமில்லை


ஒரு காலம் வரும் அப்பொழுது திருவரங்க கோவில் முன்னால், சமயபுரம் கோட்டை முன்னால், மதுரை ஆலயம் முன்னால், நெல்லை பேராலயத்தின் உள்ளே எல்லாம் அவனுக்கு சிலை நிறுபடும்


தாமிர பரணி முதல் துங்கபத்ரா தாண்டிவரை இப்பொழுதும் அவன் நினைவுகளை சுமந்து ஓடு நதிகரையெல்லாம் அவன் புகழ் மீட்டெடுக்கபடும்


அதுவரை சித்திரை மூலம் என்பது அவன் புகழை தாங்கி நிற்கும் ஒரு நாளாக பாண்டி நாட்டு மக்கள் மனதில் நிற்கட்டும்


தமிழக மன்னர்கள் புகழும் அடையாளமும் வெளிவந்து விட கூடாது என ஆப்கானிய சுல்தான்களும், நாயக்கர்களும், வெள்ளையனும் அச்சபட்டதில் அர்த்தம் உண்டு


அது தங்கள் ஆட்சிக்கான ஆபத்து என அஞ்சினார்கள்


ஆனால் இந்த சுதந்திர திருநாட்டிலும் தமிழக இந்துமாணவன் இதனையெல்லாம் படிக்காமல்  கஜினி , கோரி, அக்பர், அசோகர், பாபர், திப்பு சுல்தான் என ஏன் படிக்க வேண்டும்? யார் அப்படி படிக்கவைக்க உத்தரவிடுகின்றார்கள்? தமிழ்நாட்டிலே தமிழ் அரசர்களின் பெயர் மறைக்கபடுவது ஏன் என்பதுதான் தெரியவில்லை


தமிழக கல்வி வரலாற்று துறையின் மிக பெரிய அநீதி இது


இங்கு தமிழன் யார்? அவன் எப்படி இந்துவாய் இருந்தான்? அவன் வரலாறு என்ன? அவன் வாழ்ந்த பெருவாழ்வு என்ன? அவன் கண்ட அழியா ஆலயங்களும் பக்தியும் என்ன? என்பதையெல்லாம் தமிழக மன்னர்களின் வரலாறை மீட்டெடுக்கமால் சொல்ல முடியாது


அதில் ராஜராஜனும் ராஜேந்திரனும் வெளிவந்தார்கள், இன்னும் வெளிவரவேண்டிய மன்னர்கள் ஏராளம் உண்டு எனினும் ஜடாவர்மனின் வரலாறு மகா முக்கியமானது


ராஜராஜனுக்கும் ராஜேந்திரனுக்கும் இருந்த சிவபக்தியில் கொஞ்சமும் குறைந்ததல்ல ஜடாவர்மனின் சிவபக்தி, அவனின் வாழ்வும் சிவதொண்டும் அதைத்தான் சொல்கின்றன‌


அவன் போர்கள் செய்ததும் ராஜ்யம் நடத்தியதும் சிவாலயங்களை கட்டவும், திருமாலுக்கு அள்ளி கொடுக்கவுமே என்பது போல் அவனின் வாழ்வு இருந்தது, அவ்வளவு பெரும் பணிகளை செய்திருகின்றான்


உடையார் போல அவன் வாழ்வும் ஒரு நாவலாக வரவேண்டும், மிக மிக சுவாரஸ்யமான நாவலாக வரலாற்றின் மாபெரும் முக்கிய அரசியல் நாவலாக அது நிச்சயம் வரும், அவ்வளவு சுவாரஸ்யமான வாழ்வு அவனுடையது


காலம் ஒருவனை வைத்து நிச்சயம் அதை உருவாக்கும்


அவனின் குருபூஜை நாளில் பாண்டிய மக்களின் ஒருவனாகவும், மாபெரும் இந்து அரசனாக விளங்கிய அவனுக்கு ஒரு இந்தியனாகவும் வீரஅஞ்சலி செலுத்துவதில் பெருமை கொள்கின்றோம்


அக்காலத்தில் திருவரங்கம் , திருவாணைக்கா போன்ற ஆலயங்களில் சித்திரை மூலம் திருவிழா இவன் பெயரில் பிரமாதமாக நடக்கும்


"சேரனை வென்றான்" என்ற அடைமொழியோடு அது கொண்டாடபடும்


மதுரை நெல்லையப்பர் சிதம்பரம் கோவிலில் வெகுவிஷேசமாக அவன் குருபூஜை நடந்திருந்தது, பின்னாளைய ஆட்சி குழப்பங்களில் அது வழக்கொழிந்தது


உரியகாலத்தில் அவை மீட்டெடுக்கபடும் வரை இப்படி நினைவுகளில் கண்ணீர் வழிய அந்த மாமன்னின் குருபூஜை நடக்கட்டும்


திருவரங்க வாசலில் அக்கோவிலுக்கு பொற்கூரை வேய்ந்த மன்னனுக்கு இல்லா மரியாதை, ஈரோட்டு பெண் பித்தன் ஈ. வெ. ராமசாமிக்கு  சிலையாக இருப்பதை ஒருகணம் எண்ணுங்கள்


விழியோரம் கண்ணீர் வந்தால் நீங்கள் இந்துக்களே, அந்த வலிதான் அந்த கண்ணீர்தான் சடையவர்மனுக்கு செலுத்தபடும் மாபெரும் அஞ்சலியாக இருக்க முடியும்.


- சிவார்பணம்

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

பக்குவம்

 உன்னை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி கவலைப்படாதே.


நீ எதை செய்தாலும் அதில் ஒரு குறையை கண்டுபிடிக்கக்கூடிய மனிதர்களும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். அதையும் பெரிது பண்ணாதே.உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ.


ஒன்றை மட்டும் தெரிந்து கொள்....


ஒவ்வொரு மனிதனும்

தனித்தனி ஜென்மங்கள்.

அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும். அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும்.

அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதே. அவர்கள் போகும் வரை போகட்டும். போய் ஒரு அனுபவத்தை பெற்றபின் திரும்பி வருவார்கள்.


அதுவரை நீ பொறுமையாக இருக்க வேண்டும். அவர்கள் போன பாதை நல்லதா? கெட்டதா? என்பதை அவர்களாக உணர்ந்தால்தான் அவர்களுக்கு ஒரு உண்மை தெரியும்.

அந்த உண்மையை நீ முன்கூட்டியே சொன்னால் உன்னை அவர்களுக்கு பிடிக்காது.


இதுதான் வாழ்க்கையின் உண்மை...

அவர்களது பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அவர்களின் குணங்களும் செயல்களும் இருக்கும்.


அது உடன் பிறந்தவர்களாக இருந்தாலும், நண்பர்களாக இருந்தாலும், கணவன், மனைவியாக இருந்தாலும், பெற்ற குழந்தைகளாக இருந்தாலும், பேரன் பேத்திகளாக இருந்தாலும்,உறவுகளாக இருந்தாலும்,

அவர்களது பிறவி குணம் ஒரு போதும் மாறாது. எதைச் செய்ய வந்தார்களோ அதை செய்வதுதானே அவர்களின் விதி.


இதை நீ மாற்றி அமைக்க முடியுமா?..

ஒதுங்கி நின்று வேடிக்கை பார்!....


பந்த பாசத்தில் உள்ளே விழுந்து அறிவுரை சொல்லுகிறேன் என்று 

கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டிருக்காதே..


அவர்களுக்கு அனுபவம் தான் குரு.

அந்த அனுபவம் ஏற்பட்ட பிறகு தன்னை மாற்றிக் கொள்வதற்கு அவர்களுக்கு விதி இருந்தால் தன்னை திருத்திக் கொள்வார்கள். அதுவரை நீ பொறுமையாக இரு..


செயற்கையாக ஒரு குணத்தை உருவாக்கி உன்னிடம் அன்பை காட்டினாலும் தான் யார்?, 

தன் குணம் என்ன?, என்பதை ஒருநாள் வெளிப்படுத்தி விடுவார்கள்.

எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தோடு இருந்து கொள்ள பழகிக் கொள்.


நாம்வந்து போகும் உலகத்தில் பிறந்திருக்கிறோம்.

அவரவர்களுக்கு என்ன வேஷம்.. கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதைத் தவிர வேறு எதையும் செய்து காட்ட முடியாது.எல்லையில்லாத அன்பை வைத்திருந்தேன் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று புலம்பிக் கொண்டு இருக்காதே. 


கடலுக்கும் ஒரு எல்லை வைத்திருக்கிறான் இறைவன்.

அதையும் மீறி சிலவேளைகளில் இறைவன் வகுத்த எல்லையை கடல் தாண்டி விடுகிறது. இயற்கையின் சுபாவங்கள் சில நேரங்களில் தங்களை வெளிப்படுத்தி விடும்.


நீ உன்னை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படி வைத்துக்கொண்டு வாழப் பழகிக் கொள். அதில் நன்மை வந்தாலும் ,தீமை வந்தாலும் ,உனக்கும் ஒரு அனுபவம் கிடைக்கும் .அதை வைத்து உன்னையும் திருத்திக் கொள்ளலாம்.


இன்பமானாலும்துன்பமானாலும்

அதை நீயே சந்திக்ககற்றுக்கொள்.

அதை பகிர்ந்து கொள்வதற்கு ஒரு துணையைத் தேடாதே.


உன் இன்ப துன்பத்தில் பங்கு பெறுவதற்கு இந்த பிரபஞ்சத்தில் ஒருவர் பிறந்திருந்தால் நிச்சயம் அவர் உன்னை கைவிடாமல் உன்னோடு சேர்ந்தே பயணிப்பார். 


அது உன் பிறவி பிராப்தத்தை பொறுத்து இருக்கிறது அப்படி அது நடந்து விட்டால், எந்த சூழ்நிலையிலும் உன்னோடு இணைந்தே இருப்பார்.

பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும், வரும் துன்பத்தை எதிர்கொள்ளக்கூடிய ஆற்றலை உருவாக்கிக் கொள்.


மனிதன் மீது வைக்கும் நம்பிக்கையை விட இறைவன் மீது வைக்கும் நம்பிக்கையை அதிகரித்துக் கொள்.

உன் கண்ணீரும் உன் கவலையும்

உன்னை பலவீனமாக காட்டிவிடும்...

அழுவதாலும் சோர்ந்து போவதாலும்

ஒன்றும் நடக்கப்போவதில்லை.


எப்படி இருந்தாலும் நீதான் அந்த சுமையை சுமந்து ஆகவேண்டும். அழுது சுமப்பதை காட்டிலும். ஏற்று சுமப்பது உனக்கு சிரமம் இல்லாமல் இருக்கும்.

தைரியமும் தன்னம்பிக்கையும் தான்

ஒரு மனிதனை உலகத்தில் வாழ வைக்கும் என்ற உண்மையை உணர்ந்துகொள்.


இந்த பக்குவத்தை அடைந்துவிட்டால் எத்துன்பமும் உன்னை நெருங்காது என்பதை உணர்ந்துகொள்.

உனக்கு தெரிந்த வரை நீ அறிந்த வரை

யாருக்கும் எந்த உயிருக்கும்,எந்த வகையிலும் நன்மை மட்டுமே செய்...

ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

நாடு மொழி இனம்

 நாடு, மொழி, இனம், நிறம் என்று பிளவு பட்டிருந்தாலும் 700 கோடி மனிதர்களுக்கும் ஒரு மூதாதையர் தான். அவன் பெயர் ஹோமோசேப்பியன்ஸ்.  இவனுக்கும் சிம்பன்சிக்கும் ஒரே மூதாதையர். அதன் பெயர் ஹோமிணினி. அதற்கு முன்னாடி நாமளும் கொரில்லா குரங்கும் பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ். அவர்களின் பெயர் அவுரனோபிதெகஸ். இப்படி கொஞ்சம் கொஞ்சமா உள்ளே போக போக டைனோசரஸ் கூட நம்ம சொந்தம் தான். இன்னும் கொஞ்சம் பின்னாடி போனால் கடலில் வாழும் திமிங்கிலம் கூட நமக்கு சொந்தம் தான். இன்னும் நோண்டுனோம் என்றால் நாற்பதாயிரம் அடி கடலின் உள்ளே வாழும் பிரன்ஹா என்ற ஆதியாதி காலத்து மீன் கூட நம்ம வம்சம் தான். அப்படியே இன்னும் கொஞ்சம் மில்லியன் வருசத்திற்கு போனா.. தாவரத்திற்கும், விலங்கினத்திற்கும் ஒரே தகப்பன் கிடைக்கிறது. அப்படியே இன்னும் கொஞ்சம் மில்லியன் வருடம் போனால் முதல் ஒரு செல் உயிரியை பார்த்துவிடலாம். 

அதையும் நோண்டினால் அமினோஅமிலங்கள் கிடைக்கும். இன்னும் கொஞ்சம் நோண்டினால் காற்றின் மூலக்கூறுகளான ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன்,கார்பன் கிடைக்கும். இப்படியே இன்னும் கொஞ்சம் பின்னாடி போனால் அணுக்கள் கிடைக்கும். அது இந்த பூமியின் எல்லாவற்றிலும் நிறைந்திருக்கிறது. சூரிய மண்டலத்தில், பால்வெளி அண்டத்தில், பேரண்டத்தில், பிரபஞ்சத்தில் என்று எங்கும் நிறைந்திருக்கிறது. 

இந்த அணுக்களையும் நோண்டினால் நியுட்ரினோ உள்ளிட்ட Sub-Automic Particles கிடைக்கும். அதையும் துளைத்தால் கடவுள் துகள் அல்லது போசன் துகள் கிடைக்கும். அதையும் துளைத்தால் பெருவெடிப்பு நிகழ்ந்தது எப்படி என்பது கிடைக்கும். 

இதையெல்லாம் முழுமையாக படித்தால் 

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி

ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்

கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு

வானாகி நின்றாயை- என்று திருவாசகம் சொல்லும் 

இறை என்பது அந்த அணுக்களில் உள்ளே இருக்கும் ஆற்றல் தான். அதுவும் நாம தான் நம்ம ப்ரதர் தான். அது எல்லா இடத்திலும் நிறைந்திருக்கிறது எனும்போது 

காக்கை குருவி எங்கள் ஜாதி, நீள்

கடலும் மலையும் எங்கள் கூட்டம்,

நோக்குங் திசையெலாம் நாமன்றி வேறில்லை

என்பதும் அறிவியல்படி உண்மையே. இதையெல்லாம் மிக ஆழமாக உங்கள் மனதில் உங்கள் பிள்ளைகள் சென்று சேர்த்துவிட்டால் போதும் சாதி, மதம், இனம், மொழி பிரித்து என்று ஒருவரை ஒருவர் அடக்கி ஆண்டுவிடலாம் என்று அடிமுட்டாள்தனமாக வாழாமல் அன்பு கொள்ளலாம். யாரை பார்த்தும், எதனை பார்த்தும் புன்னகைக்கலாம். நம்பிக்கையுடன் வாழலாம். உலகம் பிறந்தது எனக்காக.. 

ஓடும் நதிகளும் எனக்காக.. மலர்கள் மலர்வதும் எனக்காக.. என்று எல்லா நாளையும் கொண்டாடலாம். 

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனாரின் சொற்கள் காலையில் ஞாபகம் வந்தது. அறிவியலின் படியும் அதுதான் உண்மை. 

உடலுக்கு எல்லாம் தெரியும் என்பதை மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டு

"நான் நலமடைய வேண்டும்.இதைத் தவிர வேறெதையும் நான் அறியேன்" என்ற தூய எண்ணத்தில் பொறுத்திருந்தால்.உடல் தன்னைத்தானே சரி செய்து கொண்டு நலமடையும், இதுவே இயற்கையின் விதி.

இதற்கு அப்பாற்பட்ட மருத்துவ பேருண்மை ஏதும் இருக்க இயலாது.

காய்ச்சல் சளி இருமல் தொண்டை கரகரப்பு வாந்தி வயிற்றுப்போக்கு எது வந்தாலும் பயப்படாதீங்க. இதெல்லாமே சாதாரண காய்ச்சலுக்கு வருகிற ஒன்று தான்.

உங்களுக்கு காய்ச்சல் அல்லது அந்த மாதிரி எதாவது உணர்வு வந்தா பயமா இருக்குனு நினைச்சா மட்டும்  உடனே பக்கத்தில் இருக்கிற மருத்துவமனைக்கு போங்க(இது அவரவர் தனிப்பட்ட விருப்பம்). ஆனால் அவங்க கூடுக்கிற மாத்திரையை  விட உங்களுக்குள்ள இருக்க அந்த பயத்தை நீங்க எவ்வளவு தூரம் நமக்கு ஒன்றுமில்லையென்று உங்களை நீங்க நம்ப வைக்கிறீங்களோ அது தான் நம்மளை காப்பாற்றும்..

சரியாகிடும் நல்லா இருக்கேன் அப்படின்னு உங்களுக்குள்ள நீங்க உங்களை நம்ப வைங்க.

நமக்கு முடியாத போது நமக்காக இத்தனை பேர் இருக்காங்க ன்னு தெரிய வருது.அப்போ தான் இன்னும் வாழனும் எண்ணம் தோணுது.

மாற்றங்களே வினா மாற்றங்களே விடை 

தொகுப்பு - ஆற்றல் பிரவீன் குமார்,

வலசை வாழ்வியல் பள்ளி, ஜவ்வாது மலை,

கிழக்குத் தொடச்சி மலைகள் பாதுகாப்பு கூட்டமைப்பு

நன்றி :கட்டுரையாளர் : Karthikeyan பாஸ்துறை

நன்றி- நமனை அஞ்சோம் புத்தகத்தில் இருந்து சில வரிகள்.

சனி, 24 ஏப்ரல், 2021

நாட்டு நடப்பு

 *நாட்டு ⚖️ நடப்பு*


*♨️விலங்குகளை அழிப்பது மனித இனத்தின் பாதுகாப்பை அழிப்பதற்கு சமம் - உலக ஆய்வக விலங்குகள் தினம் (World Lab Animal Day) (ஏப்ரல் 24)*



உலக ஆய்வக விலங்குகள் தினம் (World Lab Animal Day) ஆண்டுதோறும் ஏப்ரல் 24 அன்று நினைவுகூரப்படுகிறது. இந்நாளையொட்டிய வாரம் உலக ஆய்வக விலங்குகளுக்கான உலக வாரமாகக் கொண்டாடப்படுகிறது. உலக அளவில் ஆய்வுக்கூடங்களில் விலங்குகளை ஆய்விற்காகப் பயன்படுத்துகின்றனர். விலங்குகள் மீது உயிரி மருத்துவ ஆராய்ச்சி செய்கின்றனர். இதனால் விலங்குகள் வன்முறை மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றன. ஆய்வக விலங்குகள் சித்திரவதைக்குள்ளாவதை தடுக்க தேசிய எதிர்ப்பு விவிசெக்ஸன் சங்கம் 1979ஆம் ஆண்டில், ஏப்ரல் 24 ம் நாளை உலக ஆய்வக விலங்குகள் தினமாக அறிவித்தது.


இயற்கையில் விலங்குகளின் முக்கியத்துவத்தை மிகைப்படுத்துவது கடினம். அவை பல தாவரங்களின் மகரந்தச் சேர்க்கை, விதைகளின் விநியோகம், மண் உருவாக்கம் ஆகியவற்றில் பங்கேற்கின்றன. இறந்த தாவரங்கள் மற்றும் விலங்குகளின் எச்சங்களை அழிப்பதில், நீர்த்தேக்கங்களை சுத்தம் செய்வதில் விலங்குகள் பங்கேற்கின்றன. உயிரியக்கவியல் மட்டுமல்ல, மனித வாழ்க்கையிலும் விலங்குகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. விலங்குகள் விஞ்ஞான ஆராய்ச்சிக்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. உறுப்புகளின் அமைப்பு மற்றும் செயல்பாடுகள், மருந்துகளின் தாக்கம், சுற்றுச்சூழல் நிலைமைகளுக்கு ஒரு உயிரினத்தின் எதிர்வினை ஆகியவற்றைப் படிக்கின்றன. விலங்குகள் உழைப்பு, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றில் மனித உதவியாளர்கள். இறுதியாக, இவர்கள் “குறைவான சகோதரர்கள்”, மனிதனின் நண்பர்கள். மனிதன் சுமார் 40 வகையான விலங்குகளை அடக்கி வளர்த்தான்.


இருப்பினும், மனித வாழ்க்கையில் விலங்குகளின் எதிர்மறையான பங்கு மிகவும் வேறுபட்டது. அவை விவசாய தாவரங்கள், உணவுப் பொருட்கள், தோல், கம்பளி மற்றும் மரப் பொருட்களுக்கு குறிப்பிடத்தக்க தீங்கு விளைவிக்கின்றன. பல விலங்குகள் பல்வேறு நோய்களை (மலேரியா, வயிற்றுப்போக்கு, அஸ்காரியாசிஸ் போன்றவை) ஏற்படுத்துகின்றன. நேரடியாகவும், மறைமுகமாகவும் விலங்குகள் அழிக்கப்பட்டு அன்றாட பொருட்கள், மருந்து தயாரிப்புகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இதனால்தான் பல உயிரினங்கள் அழிந்து வருவதோடு, அரிய வகையாகவும் இருந்து வருகின்றன. குறிப்பாக, நாம் அரிதாக பார்க்கும் எறும்புத்திண்ணி வெளிநாடுகளில் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சம் எறும்புத்தின்னிகள் காடுகளில் இருந்து பிடிக்கப்பட்டு, வியட்நாமுக்கும், சீனாவுக்கும் கடத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


இவைகள் மட்டுமல்ல. யானை, புலி, சிங்கம் உள்ளிட்ட உயிரினங்களும் ஆண்டுதோறும் அதிகளவில் இறந்து வருகின்றன. தான்சானியாவில் கடந்த 2009ம் ஆண்டு ஒரு லட்சத்து 9 ஆயிரமாக இருந்த யானைகளின் எண்ணிக்கை, 2014ம் ஆண்டு 43 ஆயிரமாக சரிந்துள்ளது. இவைகள் தந்தங்களுக்காக அதிகளவில் கொல்லப்படுகின்றன. 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் மட்டும் 40 ஆயிரம் புலிகள் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. ஆனால், வேட்டை முதலிய பல காரணங்களாலும் தொடர்ந்து உலகெங்கும் புலிகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. 1973ம் ஆண்டு அன்றைய பிரதமர் இந்திரா காந்தி புலிகள் பாதுகாப்பு திட்டத்தை தொடங்கினார். இத்திட்டத்தின்படி புலிகள் காப்பகம் அமைத்து, புலி வேட்டையினை தடுப்பது ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன்பிறகே இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை மெல்ல மெல்ல உயரத் தொடங்கியது.


ஏற்கனவே வனப்பகுதியில் அரிய வகை மரங்கள் வெட்டி கடத்தப்பட்டு வருகின்றன. விலங்குகளின் மறைவிடமாவும், இருப்பிடமாகவும் உள்ள மரங்கள் வெட்டி கடத்தப்படுவது வேதனையான விஷயம். வனத்தில் மரங்கள் அழிப்பது, மழைவளத்தை அழிப்பதற்கு சமம். விலங்குகளை அழிப்பது வனம், மனித இனத்தின் பாதுகாப்பை அழிப்பதற்கு சமம். எனவே, விலங்குகளை காப்போம்.


மகிழ்ச்சியாக வாழ்வோம்

 மனித உடலில் எவ்வளவு இரத்தம் ஓடவேண்டும் என்பதில் தொடங்கி மனிதன் எவ்வளவு சிறுநீர் கழிக்க வேண்டும் என்பது வரை நவீன மருத்துவம் அளவு வைத்துள்ளது 100 ஆண்டுகளாக...மேலும் அந்த அளவுகள் கூட நிரந்தரமாக வைத்துள்ளனவா என்றால் இல்லை..bp ,Suger,choloestrol என 10,20,30 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி வருகின்றனர், இது உண்மை... நீங்களே Suger தற்போது 80/120 normal என்றால்... பழைய chart ல் 50/80 பின்பு 60/90என இருக்கும்...கடந்த 50 வருடத்தில்,,, choloestrolலும் அப்படித்தான்,எந்த group இரத்தமானாலும் அவங்க தான் அளவு செல்வார்களாம், ஒரு வேளை நீங்கள் இயல்பாக மிக ஆரோக்கியமானவராக இருந்து தற்போது குறித்துள்ள அளவில் நீங்கள் இல்லை என்றால் நீங்களும் நோயாளி தான்,, நீங்கள் அப்ரமா செருப்பக்கு தகுந்தாற் போல் காலை வெட்ட வேண்டும் எனா ஊரோடு ஒத்து வாழ வேண்டும் இல்லையா... சரி.....நம் நாட்டு மருத்துவம் ஒருவன் சிறுநீரின் வாடை புதிய வைக்கோல் வாசத்தில் இருக்க வேண்டும் எனவும் ஒருவன் உடல்நல குறைவினால் வெந்நீர் குழிக்க வேண்டிய சூழல் வந்தால் அவனவன் சிறுநீர் சூட்டின் அளவு அவன் குளிக்கும் வெந்ரீன் சூடு இருக்க வேண்டும் எனவும் அவனை வைத்தே தீர்வு சொல்கிறது ....5 அறிவு அஃறினை வரை மருத்துவனும் இல்லை, மனோத்தத்துவ நிபுனரும் இல்லை, அவன் மரபனுவும் ,அதன் பொற்றோரும் ,முன்னோரும் மட்டுமே அனைத்திற்கும் தீர்வு,,மனித இனத்திற்கு எத்தனையோ சித்தனும் புத்தனும் வந்து வழி காட்டினாலும் இயல்பாய் வாழ இத்தனை தள்ளாடுகிறான் ,அவன் design அப்படி மந்தையில் வாழ்ந்தால் மாடாய் தான் இருப்பாய் மனிதா.. பிறப்பால் ஒவ்வொறு மனிதஉயிரும் தனி சிறப்பு போலிகளை அடையாளம் கண்டு கொள்ளுங்கள் மனிதர்களே... ஒரு மனிதனின் வாழ்நாள் எவ்வளவு காலம்?""ஒரேயொரு மூச்சு" தானா என்கிறேன்..அடுத்த மூச்சுவிட நீ இல்லை எனில்,அல்லது அடுத்த மூச்சு உமக்கு வரவில்லை எனில் நீ சவம் ..


வெறும் மூச்சு விடும் நேரம் மட்டும் தானாஅப்படியல்ல. வாழ்வு என்பது ஒவ்வொறு கண பொழுதிலும் முழுமையாக வாழ வேண்டும் என்பதே..


சிலர் நேற்றில் வாழ்கிறார்கள். நேற்றைய நினைவுகளில் மூழ்கி இறந்து வாழ்கிறார்கள்.

சிலர் அறியப்படாத எதிர்கால கனவில், ஏக்கத்தில் தெளிவில்லாமல் வாழ்கிறார்கள்.இப்படி வாழப் பழகிக் கொண்டவர்கள் நிகழ் கால வாழ்வை இழந்து விடுகிறார்கள்.


ஒரு மனிதன் இறந்த கால சோகங்களையும், ஏமாற்றங்களையும், நிராசைகளையும் திரும்பத் திரும்ப எண்ணி மனம் வெதும்பினால் நிகழ்காலம் எவ்வாறு இருக்கும்? எத்தனை முறை எண்ணிப் பார்த்தாலும் நடந்ததை மாற்ற இயலுமா? இதனால் பாதிப்படைவதைத் தவிர வேறு பயன் ஏதும் உண்டோ?" 


ஒருவர் வண்டியில் பயணம் செய்யும் பொழுது தனது மூட்டையைக் கீழே வைக்காமல் தலையில் சுமந்தபடியே அமர்ந்திருந்தாராம். இறந்த கால சுமைகளை இறக்கி விட்டு விடுங்கள்.


நீங்கள் விடும் இந்த மூச்சு மட்டுமே உங்களுக்குச் சொந்தமானது; உங்கள் கட்டுப்பாட்டில் இருப்பது. எனவே முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளுங்கள்.


எதிர்காலம் பற்றிய கவலையை விடுத்து, மகிழ்ச்சியுடனும், வாழ்வின் நோக்கம் பற்றிய விழிப்புணர்வுடனும் வாழ கற்றுக் கொண்டால் ஆழகாக கடந்து விடலாம்.வாழ்தலே வழிபாடு..

வெள்ளி, 23 ஏப்ரல், 2021

தைரியம்

 படித்தவுடன் மிகுந்த தைரியம் வரும்.


இறைவன் படைப்பில் நீ எதற்காக பூலோகத்திற்கு வந்தாயோ அந்த கர்ம காலம் முடியும் வரை கரோனா மட்டுமல்ல வேறு எந்த விதத்திலும் உனக்கு மரணம் சம்பவிக்காது ! பயம் கவலைகளை விட்டு நிம்மதியாக வாழுங்கள் ! கர்ம காலம் முடிவுக்கு வந்து விட்டால் கரோனா என்ன ஒரு புல் கூட உன் மரணத்துக்கு காரணமாகி விடும் ! படைத்த ஆண்டவனே நினைத்தால் கூட உன்னை காப்பாற்ற முடியாது ! கர்ம காலம் முடியாததால் நேருக்கு நேர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட MGR & ராதா இருவருமே சாகவில்லை ! ஆனால் கட்டுமஸ்தான உடல்  பெற்ற முத்துராமன் ஊட்டியில் காலையில் jogging போகும் போது புல்தரையில் வழுக்கி கீழே விழுந்து மரணமடைந்தார் ! புராணங்களிலும் இதற்கான உதாரணம் உண்டு ! பாண்டவர்களின் பாரம்பரியத்தில் ஆட்சி புரிந்த பரீட்சித் மகாராஜா தன் வாழ்க்கை இன்னும் ஒரு வாரத்தில் முடிய போகிறது அதுவும் நாகம் தீண்டி சம்பவிக்கும் என்பதை முன் கூட்டியே தெரிந்து அதிலிருந்து தப்ப மிகுந்த பாதுகாப்புடன் இருந்தும் ஏழாம் நாள் அவர் பூஜை செய்யும் பூவிலிருந்தோ பழத்திலிருந்தோ வெளிப்பட்ட ஒரு பூநாகம் தீண்டி உயிரிழந்தார் ! அதனால் நம் கர்ம காலம் முடியும் வரை எதனாலும் நம்மைக் கொல்லமுடியாது என்ற முழு நம்பிக்கையுடன் பயமில்லாமல் வாழுங்கள் ! பயமே பல நோய்களுக்கு காரணமாகி விடும் !

தென்னமரத்திலிருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு, திண்ணையிலிருந்து விழுந்து போனவனும் உண்டு.

 பல மாடிக் கட்டடத்தில் இருந்து விழுந்து பிழைத்தவனும்

உண்டு.

புல் தடுக்கி விழுந்து செத்தவனும் உண்டு.

தைரியமே புருஷ லட்சணம்.

 அமைதியும் ஆனந்தமும் பெற்று வாழ்க!                                                                                😄